ஈரானில் கொரோனா தொற்று உயிரிழப்பு 11,000ஐ தாண்டியது

ஈரானில் கொரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்துல் 148 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஈரானில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

ஈரானில் இதுவரை 2,32,863 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஈரானின் எல்லையோர நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஈரானில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப மாதங்களில் இந்த நகரங்களில் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை.

தற்போதுதான் தொற்று அதிகரித்து வருகிறது என்று ஈரான் அரசு முன்னரே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளில் ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Sat, 07/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை