ஜூன் 06 முதல் சுற்றிவளைப்புகளில் 75,531 பேர் கைது

- பல்வேறு ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மீட்பு

கடந்த ஜூன் மாதம் 06ஆம் திகதி முதல், இம்மாதம் 15ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 75,531 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 15,152 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் 28,329 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 9,648 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 7,064 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 589 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 154 பேரும், வெடிபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 12 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 14,583 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சுற்றிவளைப்புகளில் ரி 56 வகை துப்பாக்கிகள் 11 உம், ரி 81 வகை துப்பாக்கி 01 உம், 12 துளை கொண்ட துப்பாக்கிகள் 48 உம், கைத்துப்பாக்கிகள் 05 உம், நாட்டுத் துப்பாக்கிகள் 29 உம், ரிபிட்டர் வகை துப்பாக்கிகள் 74 உம், ரிவோல்வர் வகை துப்பாக்கிகள் 02 உம், வேறு துப்பாக்கிகள் 02 உம், தோட்டாக்கள் 838 உம், வாள்கள் 07 உம், கத்திகள் 03 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, இந்நடவடிக்கைகளின்போது வெடிபொருள் 367 கிராமும், டெட்டனேட்டர்கள் 23 உம், கைக்குண்டுகள் 22 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதம் மதுபானம் 468,184 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Thu, 07/16/2020 - 11:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை