ஜுலை 2ம் திகதி முதல்
ஜுலை 2ம் திகதி முதல் மகாவலி L வலயத்தில் பஸ் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதற்கான பணிப்புரைகளை இலங்கை போக்குவரத்து சபைக்கு விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க தினமும் நான்கு போக்குவரத்துச் சேவைகள் வவுனியா−முல்லைத்தீவு, வவுனியா-−அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு-−திருகோணமலை என மேற்படி பஸ் சேவைகள் இடம்பெறுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மகாவலி L வலயத்தில் பல்வேறு கிராமங்களிலுள்ள மக்கள் அப்பகுதிகளுக்குப் போக்குவரத்துச் சேவைகளை பெற்றுத் தருமாறு தம்மிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் ஜுலை 02ம் திகதி முதல் போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கிணங்க முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து சம்பத் நுவர வரை மகாவலி L வலயத்தினூடாக பல கிராமங்களை உள்ளடக்கிய வகையில் இந்த போக்குவரத்துச் சேவை இடம்பெறுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn