COVID 19; அரசின் முன்மாதிரியான நடவடிக்ைகக்கு இந்தியா பாராட்டு

அமைச்சர் பவித்ராவை சந்தித்து தூதுவர் வாழ்த்து

அரசாங்கம் முன்னெடுக்கும் கொவிட்-19 ஒழிப்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய தூதுவர் கோபால் பக்ளே நேற்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியை சந்திந்தார்.சுகாதார அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன் போது கொரோனா ஒழிப்பிற்கு இலங்கை அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டிய இந்திய தூதுவர், சுகாதார அமைச்சர் வழங்கி வரும் தலைமைத்துவத்தையும் வெகுவாக பாராட்டினார். எத்தகைய நிலைமையிலும் அரசுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் இந்திய அரசு வழங்கிய ஒத்துழைப்பை வரவேற்ற அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

 

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை