சிறைச்சாலைகளில் சட்டவிரோதம் CID விசாரணைகள் ஆரம்பம்

விரைவில் அனைவரும் சிக்குவர் என்கிறார் கமல்

சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு உதவிய அதிகாரிகளுக்கு எதிராக தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக விசாரணைகள் நடைபெறுவதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சிறைச்சாலைகளில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார். சிறைச்சாலை அதிகாரிகளுக்காக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட  செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இவ்வாறான ஊழல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது சட்டமா அதிபர் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுப்பார்.சிறைச்சாலைகள் சேவையை திறம்பட முன்னெடுக்க அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடாது, ஓய்வு பெற்ற பின்னரும் தமது சேவையில் திருப்தியடைய கூடிய வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை