நீர்கொழும்பு சிறைச்சாலையில் திடீர் சுற்றிவளைப்பு:

கைபேசிகள், உபகரணங்கள் மீட்பு

புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீர்கொழும்பு சிறைச்சாலையில் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். இச் சுற்றிவளைப்பின் போது 61 கையடக்கத் தொலைபேசிகள், 51 சிம் அட்டைகள், 30 மின்கலங்கள், கையடக்கத் தொலைபேசிகளுக்கு மின் ஏற்றும் 71 கலங்கள் மற்றும் 16 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

கையடக்கத் தொலைபேசிகளூடாக மேற்கொள்ளப்பட்டுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். புதிய சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய நேற்று முன்தினம் பதவி ஏற்றார். சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் பாரிய குற்றச்செயல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.இதற்கென விசேட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.(பா)

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை