நியூசிலாந்தில் மீண்டும் வைரஸ் தொற்று பதிவு

நியூசிலாந்தில் கடந்த 24 நாட்களுக்குப் பின் முதல்முறை இரு கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தமது பெற்றோரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று நாடு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரிடமுமே நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் உள்நாட்டில் அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்திய நியூசிலாந்து கொவிட்-19 தொற்றில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றதாகவும் அறிவித்தது. எனினும் எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் நிலையில், குடிமக்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மாத்திரமே நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர்.

நியூசிலாந்தில் 1,506 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 22 பேர் பலியாகினர்.

 

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை