கசகஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா

கசகஸ்தானின் செல்வாக்கு மிக்க முன்னாள் ஜனாதிபதி நூர் சுல்தான் நசர்பெயெவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு சுய தனிமைப்படுத்தலை கடைப்பிடித்து வருகிறார்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட அவரது பேச்சாளர் அய்டோஸ் உகிபாய், இது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

79 வயதான நசர்பெயெவ் மூன்று தசாப்தங்கள் கசகஸ்தான் ஜனாதிபதியாக இருந்து கடந்த ஆண்டே பதவி விலகினார். எனினும் அவர் தொடர்ந்தும் நாட்டின் தீர்க்கமான அதிகாரங்களை தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கசகஸ்தானில் 15 ஆயிரத்துருக்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை