நியூசிலாந்தில் கொவிட்- – 19 நோயால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள், நாட்டில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தும் நிலையங்கள் இனி பாதுகாப்புப் படையின் பொறுப்பில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பும் வலுப்படுத்தப்படும்.
அவர்கள் இருவரும் பிரிட்டனிலிருந்து அண்மையில் நியூசிலாந்துக்கு வந்தவர்கள். குறுகிய காலத்திலேயே தனிமைப்படுத்தும் நிலையங்களிலிருந்து இருவரும் வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கும் வைரஸ் தொற்றுக்கான லேசான அறிகுறிகள் இருந்தும், இருவருமே கொவிட்-19 நோய்க்குச் சோதிக்கப்படவில்லை. விதிகள்படி அவர்கள் இருமுறை சோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இத்தகைய தவறைத் தவிர்க்க பாதுகாப்புப் படையின் கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாக நாட்டின் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் கூறினார்.
நிலையத்தைவிட்டு வெளியேற அந்த இரு பெண்களையும் அனுமதித்திருக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்துச் செயல்முறைகளும் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, தனிமைப்படுத்தும் நிலையங்களில் தணிக்கை நடத்தப்படும்.
வைரஸ் தொற்று தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வழக்கநிலைக்கு முதலில் திரும்பிய நாடுகளில் நியூசிலாந்தும் அடங்கும்.
from tkn