மூன்று அமெரிக்க மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு

அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட 3 மாநிலங்களில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா ஆகிய 3 மாநிலங்களும் மக்கள் தொகையின் அடிப்படையில் முதல் 3 இடங்களில் உள்ளன.

கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த செவ்வாயன்று ஒரே நாளில் ஏழாயிரத்து 149 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த புதனன்று டெக்சாஸ் மாநிலத்தில் ஒரே நாளில் ஐயாயிரத்து 551 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புளோரிடா மாநிலத்தில் செவ்வாயன்று ஒரே நாளில் புதிதாக ஐயாயிரத்து 511 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை