மருதமுனை எவபெஸ்ட் சமுகசேவை அமைப்பு நடாத்திய கொரோனா கரம் சுற்றுப்போட்டி

மருதமுனை எவபெஸ்ட் சமுகசேவை அமைப்பு நடாத்திய கொரோனா கரம் சுற்றுப்போட்டி அண்மையில் அமைப்பின் மருதமுனை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆறுபேர் பங்கு கொண்ட இச்சுற்றுப் போட்டியில் என்.எம்.அனீஸ் அஹமட் முதலாமிடத்தைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டார் எம்.ஜே.முகமட் ஜெஸீம் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டனர். பரிசளிப்பு நிகழ்வில் எவபெஸ்ட் சமுகசேவை அமைப்பின் தலைவர் எம்.எச்.அஹமட் அஜ்மீர், ஆலோசகர்கள் ஏ.ஜே.சமீம்,எம்.ஐ.முகமட் நிப்ராஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு பணப்பரிசில்களையும்,வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.

எம்.வை.முகம்மட் ஜெஸீல் மத்தியஸ்தராகக் கலந்து கொண்டு போட்டிகளை நடாத்தி வைத்தார்.

மருதமுனை தினகரன் நிருபர்

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை