வத்தளை கடலில் குளித்த நால்வர் நீரில் மூழ்கி பலி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 யுவதிகள், ஒரு சிறுவன்

வத்தளை – திக்கோவிட்ட கடற்கரையோரத்தில் குளிக்கச் சென்ற சிறுவனுடன் நால்வர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நேற்று முன்தினம் மாலை திக்கோவிட்ட மயானத்திற்கு முன்பாகவுள்ள கடற்பிரதேசத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

ஐவரும் நீரில் மூழ்கியதையடுத்து கடற்படையினரும் பிரதேச மக்களும் இணைந்து அவர்களை மீட்டு ராகமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் 3 யுவதிகளும் சிறுவன் ஒருவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். புபுதுகம, உஸ்வெட்டக்கெய்யாவ மற்றும் ஹாலிஎல பகுதிகளைச் சேர்ந்த 16, 20 மற்றும் 30 வயதுடைய யுவதிகளும் கந்தானையைச் சேர்ந்த 14 வயது சிறுவனும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். நீரில் மூழ்கிய மற்றுமொரு பெண், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை