மேலும் இரு கடற்படையினர் குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இரு கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (27) வெளியேறியுள்ளனர்.

இக்கடற்படையினர், காத்தான்குடி மற்றும் வெலிக்கந்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவ்வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் மேலும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 823ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கடற்படையினர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மேலும்  14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sun, 06/28/2020 - 11:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை