புதையல் தோண்டிய பெண் உள்ளிட்ட மூவர் கைது

வவுனியா கிப்புல்கல மலையில் சம்பவம்

வவுனியா நத்திமித்திரகமவில் உள்ள கிப்புல்கல மலையில் புதையல் தோண்டிகொண்டிருந்த வைத்தியர் ஒருவரது மனைவி உட்பட மூன்று பேர் பொஹஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிப்புல்கல மலைப் பகுதியில் சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு புதையல் தோண்டுவதாக பொஹவெஸ்வாவே பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.

பூஜைப்பொருட்கள், பித்தளை மோதிரங்கள், புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தும் உபகரணங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா நந்திமித்ரகமவை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை பொஹஸ்வௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை புதையல் தோண்டிய நந்திமித்ரகமவிலுள்ள கிம்புல்கல மலைப்பகுதியானது மிகவும் பழமை வாய்ந்த புராதன இடிபாடுகளைக்கொண்ட தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியாகும்.

வவுனியா நிருபர்

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை