மன உளைச்சலுக்கு உள்ளாகிவரும் ஐ.தே.க ஆதரவாளர்கள் கவலையில்

பாரம்பரிய கட்சியை அழிப்பதாக நாமல் சாடல்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் சஜித் பிரேமதாஸ ஏற்படுத்திய சிக்கல் காரணமாக கட்சி அழிந்து விட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த நிலைமையினால் பாரம்பரிய ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும் தேவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு உள்ளது.  ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் எம்.பி நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வலுவான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஐ.தே.க ஆதரவாளர்களை லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை