முப்பது வருட காலத்துக்குப் பின்னர்
பாகிஸ்தான் வழியாகப் பெருங்கூட்டமாக வரும் பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் பயிர்களை நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை வேறு நாடுகளுக்கும் படையெடுக்கும் அபாயம் உள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களில் வெட்டுக்கிளிகளின் மிகப்பெரிய தாக்குதல் இது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டு ட்ரோன்கள், ட்ராக்டர்கள் மற்றும் கார்கள் உதவியுடன் பூச்சிகொல்லி மருந்து தெளித்து அவற்றை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராஜஸ்தானுக்குள் நுழைந்து இந்தியாவில் அழிவை ஏற்படுத்துவதற்கு முன்னதாக, இந்த வெட்டுக்கிளிகளின் பிரமாண்டமான கூட்டம் பாகிஸ்தானில் மாபெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, நான்கு கோடி வெட்டுக்கிளிகளைக் கொண்ட கூட்டமானது 35 ஆயிரம் மக்களுக்கு போதுமான உணவை அழித்து விடும்.
வெட்டுக்கிளிகளை விரட்ட மக்கள் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். சிலர் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தார்கள். வேறு சிலர், பாத்திரங்களை தட்டி ஓசை எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்ட முயல்கிறார்கள். 1993ஆம் ஆண்டுக்கு பிறகு, இவ்வளவு பெரிய அளவில் வெட்டுக்கிளி தாக்குதலை இந்தியா எதிர்கொண்டதில்லை.
from tkn