பாகிஸ்தானில் வைரஸ் தொற்று அதிகரிப்பு

பாகிஸ்தான் முடக்க நிலையை தளர்த்தி இருக்கும் சூழலில் இதுவரை இல்லாத அளவுக்கு நாளாந்த கொரோனா நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் புதிதாக 5,834 கொரோனா வைரஸ் தொற்று சம்பங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் அந்நாட்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 120,000ஐ நெருங்கியுள்ளது.

பாகிஸ்தானில் முடக்க நிலையை கடைப்பிடிக்கும்படி உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை