குளவி கொட்டியதில் கொழுந்து பறித்த இருவர் பாதிப்பு

தலவாக்கலை, வட்டகொடை  யொக்ஸ்பொர்ட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு  இலக்கான இருவர்,   வட்டகொடை  பிரதேச வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (08) காலை தேயிலை மலையில் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தனர். இதன்போது, குளவிக் கொட்டுக்கு குறித்த இருவரும் இலக்காகியுள்ளனர்.

அதேவேளை, மலையக பெருந்தோட்ட பகுதிகளில் நாளாந்தம் குளவிக் கொட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் குளவிக் கொட்டினால் நால்வர் பலியாகியுள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது

(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர் - செ.தி. பெருமாள்)

Mon, 06/08/2020 - 11:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை