ஒன்பது நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து விடுதலை

நியூசிலாந்து, தன்சானியா, வத்திக்கான் உட்பட 9 நாடுகள் கொரோனா இல்லாத நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் இப்போதைக்கு கொரோனா நோயாளிகள் இல்லை என்பதால் 7 வாரங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதேபோன்று ஆபிரிக்க நாடான தன்சானியாவில் 509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அந்நாடு கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ஜோன் மகுபூலி அறிவித்துள்ளார்.

வத்திக்கானில் ஜூன் 6ஆம் திகதி நிலவரப்படி 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் குணமடைந்துள்ளனர்.

இதேபோன்று பிஜி, மொன்டிநெக்ரோ, சீசல்ஸ், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், டிமோர், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளும் கொரோனா இல்லாதவையாக மாறியுள்ளன.

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை