முகக் கவசம் அணியாவிடில் பஸ், ரயிலில் ஏற முடியாது

அமைச்சர் அமரவீர அறிவிப்பு

பொதுப்போக்குவரத்துச் சேவை நாளை திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்புவதால் சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமென போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென்றும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக பொதுப்போக்குவரத்து சேவையை பயன்படுத்த வேண்டாமென போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

நாளை திங்கட்கிழமையிலிருந்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன. இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் அமுல்படுத்தப்படுமென்று தெரிவித்த போக்குவரத்து அமைச்சர், ஆசனங்களின் எண்ணிக்கைக்கமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும். பஸ் மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சகல பஸ்களிலும் ஆசனங்களில், 50 வீதமான பயணிகளுடன் பஸ்கள் தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டுமென்றும் கூறினார். 

 இதேவேளை, பாடசாலை பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பஸ்களை தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் இந்த பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

Sun, 06/07/2020 - 08:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை