தனியாருக்கு மணல் அகழ அனுமதி வழங்கியதற்கு எதிராக போராட்டம்

வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் தனியார் ஒருவருக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று காலை 7:30 மணியளவில் ஆரம்பமான மறியல் போராட்டம் நண்பர்கள் வரை இடம்பெற்றது.

மணக்காடு பகுதியைச் சேர்ந்த 17 பாரவூர்திகளுக்கும் மணல் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனியார் ஒருவருக்கு அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அங்குள்ள பார ஊர்தி வைத்திருக்கும் 17 பேரும் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நாளைய தினத்துக்குள் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் சனிக்கிழமை முதல் தொடர்மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நாகர்கோவில் நிருபர்

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை