பாக். பங்குச் சந்தையில் தாக்குதல்: ஏழு பேர் பலி

பாகிஸ்தானின் வர்த்தக மையமாக உள்ள கராச்சி நகரில் பங்குச் சந்தை கட்டடத்தில் துப்பாக்கிதாரிகள் நேற்று நடத்திய தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இதில் ஒரு பொலிஸார் மற்றும் இரு காவலர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு நான்கு தாக்குதல்தாரிகளும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக மீட்புச் சேவை தலைவர் பைசால் எதி தெரிவித்துள்ளார். இரு பொலிஸார் உட்பட மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
கைக் குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டே தாக்குதல்தாரிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கட்டடம் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருப்பதோடு இங்கு பல தனியார் வங்கிகளின் தலைமையகங்களும் உள்ளன.
“இரு தாக்குதல்தாரிகள் வாயிலிலேயே கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் காயமடைந்த நிலையில் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டபோது அங்கு வைத்து கொல்லப்பட்டனர்” என்று எதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதன்போது கட்டடத்திற்குள் இருந்தவர்கள் பின்புறக் கதவினால் வெளியேற்றப்பட்டதாக பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

 

Tue, 06/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை