ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பொது இடத்தில் வாயு வெளியேற்றிய நபர் ஒருவருக்கு 500 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத்தை நியாயப்படுத்தி இருக்கும் வியன்னா பொலிஸார், அது வாயு வெளியேற்றத்தை விடவும் அதிகமாக இருந்தது என்றனர். “தற்செயலாக ஒன்றை விடுவது பற்றி எவரும் முறையிடப்போவதில்லை” என்று பொலிஸ் திணைக்களம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூன் 5 ஆம் திகதி காலை நேரத்தில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் அணுகும்போது, “அவர் ஏற்கனவே ஆத்திரமூட்டுவதும் ஒத்துழைக்காத வகையிலும் நடந்துகொண்டார்” என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து பூங்கா இருக்கையில் இருந்து எழுந்திருந்த அவர், “அதிகாரிகளை பார்த்து வேண்டுமென்று பெரியதாக வாயு வெளியேற்றத்தை மேற்கொண்டார்” என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
from tkn