பகமூண –தம்புள்ளை வீதியில், தமனயாய பிரதேசத்தில் இன்று (02) காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில், இராணுவ வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்றும், தனியார் பஸ் வண்டியொன்றும் நேருக்நேர் மோதி விபத்திற்குள்ளானதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இராணுவ வீரர்கள் இருவர் படுகாயமடைந்ததை தொடர்ந்து, பகமூண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
லுணுகல மற்றும் கல்தொட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 27, 28 வயதுடைய இராணுவ வீரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் குறித்த பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பகமூண பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
from tkn