இந்திய மீனவர்களின் எல்லை மீறும் செயலை தடுத்து நிறுத்த கோரிக்கை

இந்திய உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி முன்னகர்த்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கைக்கான இந்திய  உயர்ஸ்தானிகருக்கும் இடையில் (24) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய மீனவர்கள் விவகாரத்தை சுமுகமான முறையில் தீர்த்து வைப்பதற்கான திட்ட முன்வரைபு ஒன்றை இந்தியப் பிரதமரிடம் ஒப்படைத்திருந்தார்.

இத்திட்ட முன்வரைபில் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியத் தரப்பினர் திருப்தி வெளியிட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவாரத்தையை முதலில் நடத்துவதென்றும் பின்னர் அமைச்சரவை மட்டத்திலான பேச்சுக்களை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே திட்டமிட்டது போன்று இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையை காணொளி மூலம் நடத்துவது தற்போதைய சூழலில் நடைமுறைச் சாத்தியமானது என்ற விடயத்தையும் இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை