ஐ.தே.கவின் வாக்கு வங்கி சரிய மு.காவே பிரதான காரணம்

முன்னாள் அமைச்சர் தயா கமகே சாடல்

ஐ.தே.க வின் வாக்கு வங்கி சரிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில முறையற்ற செயற்பாடுகளே காரணமாகுமென முன்னாள் அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிங்கள பௌத்தர்களின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் குறைந்துள்ளமைக்கும் இதுவே காரணமாகும்.

சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது தமது சமூக கோட்பாட்டை மையப்படுத்தி அரசியல் செய்கிறது. முன்னாள் அமைச்சர் ஹக்கீம் எனது நல்ல நண்பர். அவர் கண்டியிலிருந்து கிழக்கு மாகாணத்துக்கு வந்து அப்பாவி முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறார். கிழக்கு மாகாண சபையில் நான் இருந்துள்ளேன். ஆனால் முழு நாட்டிலும் சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் அங்கு நாங்கள் சிறுபான்மை இனத்தவராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை