தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவது நாமே வெளிநாடுகள் தருமென எவரும் நம்பக்கூடாது

ஒற்றுமையாக இருந்தால் பலவற்றை சாதிக்கலாம் என்கிறார் பிரதமர்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய பாராளுமன்றத்தில் பேச்சுக்களை ஆரம்பிப்போம். அந்தப் பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் அரசியல் தீர்வு தொடர்பான திட்ட வரைவு தயாரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார் .

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அத் தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். இதுவே அரசியல் தீர்வு தொடர்பான என்னுடையதும் எனது அரசினதும் நிலைப்பாடாக இருக்கின்றது.

தமிழ் மக்களுக்குத் தீர்வை நாம் தான் வழங்க வேண்டும். வெளிநாடுகள் வந்து தீர்வு தரும் என்று எவரும் நம்பக்கூடாது. ஏனெனில் இது எமது உள்நாட்டுப் பிரச்சினை. நாம் தான் பேசித் தீர்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் எம்முடன் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றார்களோ அவ்வளவு விரைவாக தீர்வை நாம் காணமுடியும். ஒற்றுமையாக – ஒன்றிணைந்து இருந்தால்தான் எதனையும் சாதிக்க முடியும். முரண்பாட்டால் எந்தப் பயனும் இல்லை என்றார்.

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை