வீரகுமார திசாநாயக்க
அரசியல் ரீதியில் எதிரணி தோல்வி கண்டுள்ளதையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு காட்டுவதாக சுதந்திரக் கட்சி பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசியல் ரீதியில் எதிரணி தோல்வி கண்டுள்ளது. தேர்தலுக்கு வேட்பு மனு கோரப்பட்ட நிலையில் தேர்தல் வேண்டாமென்று கோரி நீதிமன்றத்தை நாடியிருப்பது இது தான் முதற்தடவையாகும்.
தேர்தல் வேண்டாமென்ற கோஷத்துடன் தான் ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலுக்கு செல்கிறது. பாராளுமன்றம் கூட்டப்பட்டால் அவர்கள் பிளவுபட்டுத்தான் வருவார்கள். அரசியல் மார்க்கமொன்று இல்லாத கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி மாறியுள்ளது.
ஷம்ஸ் பாஹிம்
Wed, 06/03/2020 - 08:05
from tkn