சீன அதிகாரிகளுக்கு தடை விதிக்க டிரம்ப் கையொப்பம்

உய்குர் முஸ்லிம்கள் விவகாரம்:

சீன அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்க வகைசெய்யும் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

சிறுபான்மை உய்குர் முஸ்லிம்களைப் பெருமளவு சிறையில் அடைப்பது தொடர்பில் சீன அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பது இனி எளிதாகும்.

உய்குர் மனித உரிமைச் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

சிறுபான்மை மக்களைச் சீனா நடத்தும் விதம் குறித்துக் கண்டனம் எழுந்துள்ள சூழலில், உய்குர் மனித உரிமைச் சட்டத்தை அமெரிக்க பாராளுமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

உய்குர்கள் உட்பட பிற சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுவதற்குப் பொறுப்பான சீன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், அவர்களை அடையாளம் காட்டச் சட்டம் வகைசெய்கிறது.

இதற்கிடையே, “உய்குர் மனித உரிமைச் சட்டம்” தொடர்பில் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கவிருப்பதாகச் சீனா மிரட்டியுள்ளது.

உய்குர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறப்படுவதை சீனா மறுத்துவருகிறது.

தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு அமெரிக்காவிடம் அது வலியுறுத்தியது.

 

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை