பொதுச் செயலாளராக ஜீவன்; அனுஷியா பிரதித் தலைவர்

- ஆறுமுகனின் மறைவுக்கு பின்னரான மாற்றம்;
- இ.தொ.கா அதிஉயர்பீட கூட்டத்தில் முடிவு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இ.தொ.காவின் பேராளர் மாநாடும் தேசிய சபை மற்றும் நிர்வாகச் சபையும் நேற்றுக் காலை கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் கூடியது. இதன்போதே ஜீவன் தொண்டமான்  பொதுச் செயலாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். ஜீவன் தொண்டமானை பொதுச் செயலாளராக தெரிவு செய்யுமாறு இ.தொ.காவின் உபத் தலைவர் செல்லமுத்து, பேராளர் மாநாட்டில் முன்மொழிந்தார்.

இதனை மற்றுமொரு உபத் தலைவரான ஜெயராம் வழிமொழிய பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஜீவன் தொண்டமான் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் இ.தொ.காவின் பிரதித் தலைவராக பொதுச் செயலாளர் பதவி வகித்த அனுஷியா சிவராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், கட்சியின் தலைவரை பொதுத் தேர்தலின் பின்னர் நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேராளர் மாநாட்டில் இ.தொ.காவின் நிதிச் செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், உபத் தலைவர்களாக செந்தில் தொண்டமான், கணபதி கனகராஜ், சக்திவேல், சட்ட ஆலோசகர் ராஜதுரை உட்பட்ட தேசிய சபை, நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஹற்றன் சுழற்சி, விசேட, தலவாக்கலை நிருபர்கள்

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை