தென்னாபிரிக்காவில் பெண் கொடூரக் கொலை: ஆடவர் கைது

தென்னாபிரிக்காவில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மரம் ஒன்றில் தொங்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 31 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டிருக்கும் 28 வயது டிசெகொபாட்சோ புலே எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆடவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்தப் பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து, பாலின அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பில் அமைதிகாக்கு கலாசாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 4ஆம் திகதி காணாமல்போன புலேவின் உடல் நான்கு நாட்களின் பின் ஜொஹன்னஸ்பேர்க் புறநகர் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மரம் ஒன்றில் தொங்கவிடப்பட்டிருந்தது.

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை