இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் மரணம்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையும், இலங்கை கிரிக்கெட் சபையின் புள்ளிப் பதிவாளருமான (Scorer) பூஜானி லியனகே (15) தன்னுடைய 33ஆவது அகவையில் மரணமடைந்துள்ளார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி குழாத்தில் இடம்பிடித்த பின்னர், உள்ளூர் போட்டிகளில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்காக ஆடி வந்த பூஜானி லியனகே குருநாகல் மாவட்டத்தின் கட்டுப்பொத்த பிரதேசத்தில் ஏற்பட்ட கொடூர விபத்து ஒன்றின் காரணமாகவே மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கழக கிரிக்கெட்டுக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் புள்ளிப் பதிவாளராக செயற்பட்ட பூஜானி, சுழல்பந்து சகலதுறை வீராங்கனையாக தான் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் சந்தர்ப்பத்தில் அசத்தியிருந்தார்.

பூஜானி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் போது இலங்கையின் மகளிர் வீராங்கனைகளுக்கு ஒரு ஊக்குவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தது அவர் பற்றிய கூடுதல் தகவலாகும்.

பூஜானியின் மரணத்திற்கு சமூக வலைதளங்களில் இலங்கையின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளும், கிரிக்கெட் கழகங்களும் தங்களது இரங்கல்களை வெளியிட்டிருக்கின்றனர்.

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை