மெனிங் சந்தையை ஞாயிறு தோறும் திறக்க நடவடிக்கை

கொழும்பு, மெனிங் பொதுச் சந்தையானது நாளை (07) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும் என,  மெனிங் பொதுச் சந்தைக்கான வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மெனிங் பொதுச் சந்தையை தொற்றுநீக்கம் செய்வதற்காக இதுவரை காலமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு வந்ததாக, மெனிங் பொதுச் சந்தைக்கான வர்த்தக சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாளை முதல் ஒவ்வொரு ஞாயிறு தோறும் அதிகாலை 4.00 மணி முதல், பிற்பகல் 1.00 மணி வரை மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை நடவடிக்கைகளுக்காக சந்தை திறந்திருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.  

Sat, 06/06/2020 - 17:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை