நைஜீரியாவில் ஜிஹாதிக்களின் இரட்டை தாக்குதலில் பலர் பலி

வடகிழக்கு நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் இஸ்லாமியவாத குழுவினால் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதலில் படையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐ.நா மற்றும் ஏனைய தொண்டு ஊழியர்கள் தங்கியுள்ள படையினர் நிலைகொண்டிருக்கும் மொன்குனோ மற்றும் நிகாசாய் கிராமத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் 20 படையினர் மற்றும் 40க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் 38 பேரை சுட்டுக் கொன்றதாகவும் பயணிகளை டிரக் வண்டிக்குள்ளேயே வைத்து தீ வைத்ததாகவும் உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குபிளோ என்ற கிராமத்தில் 81 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஒருசில நாட்களுக்கு பின்னரே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மூன்று தாக்குதலுக்கும் பொக்கோ ஹராமின் பிரிவு ஒன்றான மேற்கு ஆபிரிக்க இஸ்லாமிய அரசு என்று அழைத்துக் கொள்ளும் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

இந்த பிளவுபட்ட குழு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருந்தது.

 

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை