ஒன்பது பேர் கைது
திருகோணமலை கங்கைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒன்பது பேரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட போதே நேற்று முன்தினம் (09) இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய டிப்பர் வாகனங்கள் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் தினகரன் நிருபர்
Thu, 06/11/2020 - 06:00
from tkn