துப்பாக்கி வெடித்ததில் வேட்டைக்குச் சென்றவர் பலி

பொலன்னறுவை, வஸ்கமுவ தேசிய பூங்காவில் துப்பாக்கியொன்று தற்செயலாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை, கலஹகல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (06), இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் தனது நண்பர்கள் இருவருடன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, வஸ்கமுவ தேசிய பூங்காவில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளார். அவ்வேளையில் உயிரிழந்தவரின் கையிலிருந்த துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில்,  அவர்  உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Sun, 06/07/2020 - 14:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை