தமது தேர்தல் வெற்றிக்காக தமிழ் தேசிய கோஷம் உச்சரிப்பு

தகரத்திற்கு தங்க முலாம் பூசுவதாக டக்ளஸ் சாடல்

தமது தேர்தல் வெற்றிக்காக தமிழ் தேசியத்தை கோஷமாக உச்சரிப்பது தமிழ் இனத்தின் உள்ளார்ந்த உணர்வுகளை கொச்சைப்படுத்தும் செயலாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

தமிழ் தேசியத்திற்காக தமிழர் தேசத்தில் இரத்தம் சிந்தி போராடினோம். அன்று அதுவொரு தர்ம யுத்தம். தமது தேர்தல் வெற்றிக்காக போராடுவோம் வாருங்கள் என்று எமது மக்களை உசுப்பேற்றி அழைப்பவர்கள் அந்த போராட்டக் களத்தில் ஒரு துளி வியர்வை கூட சிந்தியிருக்கவில்லை.

அவர்கள் கட்டிய வேட்டி கூட கசங்கவில்லை. எமது இளைஞர், யுவதிகளை உசுப்பேற்றிவிட்டு குடும்பங்களோடு வெளிநாடுகளுக்கு ஓடிப்போனவர்களும் தென்னிலங்கையில் வாழ்ந்தவர்களும் தமது கட்சிகளின் பெயரில் கோசங்களில் தமிழ் தேசியத்தையே வைத்திருக்கிறார்கள்.

எமது தேச விடுதலைக்காக மாபெரும் அர்ப்பணங்களை அன்று நாம் ஆற்றிய போது, அந்த பக்கமே காண முடிந்திருக்காத முகங்களும் தமிழ் தேசியம் என்ற பெயரிலேயே புதிய கட்சிகளை உருவாக்கியும் வருகிறார்கள். யாரும் கட்சிகளை உருவாக்கட்டும். தேர்தலிலும் போட்டியிடட்டும். ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று நாம் வரவேற்போம்.

அவர்கள் உச்சரிக்கும் தமிழ் தேசியம் தமது ஆழ்மனங்களில் நிறைந்திருப்பது உண்மையென்றால் இதுவரை அவர்கள் பெற்ற பேரம் பேசும் வல்ல அரசியல் பலத்தில் தமிழர்களுக்கான அரசியலுரிமையை வென்று தந்திருப்பார்கள்.

தமிழ் தேசியத்தை அவர்கள் உண்மையாகவே நேசித்திருந்தால் அரசியலுரிமையும் இன்றி, போதிய அபிவிருத்தியுமின்றி (03ஆம் பக்கத் தொடர்)

அன்றாட அவலங்களுக்கான தீர்வுமின்றி எமது தமிழ் தேசிய இனம் காணப்படுகிறது.

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை