எதிர்க்கட்சியினருக்கு சமூகத்தில் கொரோனா நோயாளிகள் மீண்டும் தோன்றி பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுன ஊடக சந்திப்பிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,...
நாட்டில் பொருளாதாரம் பாதிப்படைந்து வர்த்தகம் வீழ்ச்சிக்குள்ளாகி வேலைவாய்ப்பின்மை உருவாகி மக்கள் பாதிப்படைவதை காணவே எதிர்க்கட்சி எதிர்பார்த்துள்ளது. நாம் எதிர்க்கட்சியினரின் தேவையை நிறைவேற்றுவதற்கன்றி இந்நாட்டில் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்காகவே பணி செய்கிறோம்.
இன்று எதிர்க்கட்சியினரின் போராட்டம் பாராளுமன்றத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவதல்ல கட்சிக்குள்ளேயே உள்ளது. யார் அதிக ஆசனங்களை வெல்வது என்ற போட்டியுள்ளது. இன்று அவருக்கு சிறிகொத்தவின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டியுள்ளது. தன்னை ஜனாதிபதியாக எண்ணியே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இன்று தற்போதைய ஜனாதிபதி கோட்டாபயவின் கீழ் பிரதமராக வர எண்ணுகின்றார்.
சஜித் இன்று வேறாக தேர்தலில் போட்டியிட எண்ணினாலும் அக்கட்சியின் முக்கியமானவர்கள் விலகியுள்ளார்கள்.
ஆகஸ்ட் 05ம் திகதி தேர்தலின் பின்னர் மீண்டும் ரணில் விக்ரமசிங்கவிடம் செல்வார்கள்.
from tkn