மெக்சிகோவில் சக்திவாய்ந்த பூகம்பம்: ஐவர் உயிரிழப்பு

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஒக்சாக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதோடு மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

7.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த பூகம்பத்தில் கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

தலைநகர் மெக்சிகோ சிட்டியில் பூகம்பம் உணரப்பட்டதால், அங்கிருந்த மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களும், நோயாளிகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மெக்சிகோவில் இரு வாரத்தில் இரண்டு சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை