இஸ்ரேலிய படையினரால் பலஸ்தீனர் சுட்டுக்கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் பலஸ்தீன மூத்த அதிகாரி ஒருவரின் மருமகன் இஸ்ரேலியப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பலஸ்தீன விடுதலை அமைப்பின் செயலாளர் நாயகம் சயேப் எரகத்தின் மருமகனான 27 வயது அஹமது எரகத்தே கொல்லப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜெரூசலத்தின் கிழக்காக அபூ டிஸ் கராமத்தில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் பெண் அதிகாரி ஒருவரை நோக்கி வாகனத்தை செலுத்திய சந்தேக நபர் ஒருவரே கடந்த செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய எல்லைக் காவல் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கூற்றை பலஸ்தீன அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இஸ்ரேலிய பொலிஸாரால் அஹமது படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது மாமனாரான எரகத் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இஸ்ரேலிய இராணுவம் அதிகப்படியான பலப்பிரயோகத்தை பயன்படுத்துவதாக பலஸ்தீனர்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் வெறுமனே கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை