கறுப்பினத்தவர் மரணம்: பொலிஸார் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் பிளொயிட்டின் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மீது புதிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிளொயிட்டின் மரணத்திற்கு நேரடி காரணமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியான டெரெக் சாவின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது இரண்டாம் நிலை கொலை (திட்டமிடப்படாத கொலை) குற்றச்சாட்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமன்றி, இந்த சம்பவத்தின்போது சம்பவ இடத்தில் இருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகர் மினியாபொலிஸில், மே 25ஆம் திகதி 46 வயதான ஜோர்ஜ் பிளொயிட் பொலிஸ் அதிகாரி சாவின் பிடியில் இருந்தபோது கழுத்து நெரிபட்டு இறந்தார். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அது நாடு தழுவிய போராட்டத்துக்கு வித்திட்டுள்ளது.

 

Fri, 06/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை