லா லிகா: லெவண்டே- செவில்லா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில்

லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில், லெவண்டே மற்றும் செவில்லா அணிகள் மோதிய போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) காமிலோ கேனோ விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடின.

இதில் போட்டியின் 46ஆவது நிமிடத்தில் செவில்லா அணியின் வீரர் லுக் டி ஜோங் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போட்டியின் 87ஆவது நிமிடத்தில் செவில்லா அணியின் மற்றொரு வீரர் டியாகோ கார்லோஸ், லெவண்டே அணிக்கு ஓன் கோல் அடித்துக் கொடுத்தார்.

இதனால் 1--1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

லா லிகா புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை செவில்லா அணி, 5--1 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. லெவண்டே அணி 35 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளது.

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை