ஜோர்ஜ் பிளொயிட் மரணம்: ஒருவர் பிணையில் விடுதலை

கறுப்பு இனத்தவரான ஜோர்ஜ் பிளொயிட் பொலிஸ் காவலில் மரணமடைந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட நான்கு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிகாரியான 37 வயது தோமஸ் லேன் 750,000 அமெரிக்க டொலர் பிணையில் கடந்த வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

கடந்த மாதம் 25ஆம் திகதியன்று பொலிஸ் காவலில் நடந்த பிளொயிட் மரணம் தொடர்பில் கொலைக்குத் துணையாக இருந்ததாக லேன் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

நான்கு அதிகாரிகளும் மின்னிலாபோலிஸ் காவல் பிரிவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் கையாளும் அடக்குமுறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.

Sat, 06/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை