ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

தோனியாக நடித்த பிரபல

2018ஆம் ஆண்டு வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் தற்கொலைக்கு காரணம் இன்னும் வெளியாகவில்லை. ரியா கபூர் என்ற பெண்ணை இவர் காதலித்து வந்ததாக வதந்திகள் உள்ளன.

மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள இல்லத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த நிலையில் இருப்பது தொடர்பான தகவலை அவரது வீட்டு பணிப்பெண் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹிந்தியில் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனியின் சுயசரிதை படத்தில் நடித்திருந்தார். நடிகரின் தற்கொலை செய்தி இந்தியத் திரையுலகினர் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திறமை வாய்ந்த இந்த நடிகரின் மறைவுக்கு பலதரப்புகளிலிருந்தும் இரங்கல்கள் குவிந்து வருகின்றன.

டிவி நடிகராக புகழ்பெற்று வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2013ஆம் ஆண்டு அபிஷேக் கபூர் இயக்கத்தில் வெளியான கை போச்சே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

பி.கே, ராப்டா, கேதார்நாத், சோன்சிரியா, ட்ரைவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியாக நடித்து உலகளவில் பிரபலமானார்.

சில நாட்களுக்கு முன்பு சுஷாந்தின் முன்னாள் பெண் மேலாளரான திஷா சேலியன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கடந்த திங்களன்று தனது அப்பார்ட்மென்ட் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரம் பாலிவுட்டில் பூதாகரமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை