சமூக வலைத்தளங்களில் போலி பிரசாரம் முன்னெடுப்பு

இ.தொ.கா. கடும் கண்டனம்

அமரர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது சேறு பூசும் விதமாக முகப்புத்தகம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற்ற ஒப்பந்தங்களுடன் அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களை சம்பந்தப்படுத்தி கட்டுக்கதைகள் பரப்பப்படுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்.

குறுகிய அரசியல் இலாபம் பெரும் நோக்கில் பணத்துக்கு அமர்த்தப்பட்ட சமூக வலைத்தள விசமிகளால் இவ்வாறான போலி செய்திகள் பரப்பப்படுவதை வன்மையாக கண்டிப்பதோடு இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 (பூண்டுலோயா நிருபர்)

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை