களுவாஞ்சிகுடியில் குடும்பப் பெண் கொலை

களுவாஞ்சிகுடியில் குடும்பப் பெண் கொலை-Woman Killed-Husband Arrested-Kaluwanchikudy-Batticaloa

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் உள்ள இரண்டு பிள்ளைகளின் தாய் உயிர் இழந்த நிலையில்  இன்று  ஞாயிற்றுக்கிழமை (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடியில் குடும்பப் பெண் கொலை-Woman Killed-Husband Arrested-Kaluwanchikudy-Batticaloa

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான துர்க்கா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் களுவாஞ்சிகுடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப தகறாறு காரணமாக எனது மகளை அவரது கணவரான எனது மருமகனே கொலை செய்துள்ளார் என குறித்த பெண்ணின் தாயாரான தேவநேசராசா சாந்தநிதி தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியில் குடும்பப் பெண் கொலை-Woman Killed-Husband Arrested-Kaluwanchikudy-Batticaloa

இக்கொலைச்  சம்பவம் இன்று (28) காலை 6 மணியளவில் அவரது வீட்டில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ. சக்திவேல்)

Sun, 06/28/2020 - 16:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை