இந்தியா எதிர்க்கும் நேபாள வரைபடம் மீது வாக்கெடுப்பு

நேபாள பாராளுமன்றத்தில் அதன் புதிய வரைபடம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நேபாளம் கடந்த மே மாதம் அதன் புதிய வரைபடம் தொடர்பாக இந்தியாவை அணுகியது.

ஆனால், அதில் குறிப்பிடப்பட்ட சில இடங்கள் தமக்கு சொந்தமானவை என்று கூறி இந்தியா அந்த வரைபடத்தை நிராகரித்தது. பழைய வரைபடத்திற்குப் பதிலாக புதிய வரைபடத்தை அங்கீகரிக்குமாறு, அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கு ஏற்றவாறு அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தவேண்டுமெனவும் அது வலியுறுத்தியது. வார இறுதியில் அந்நாட்டு அமைச்சர்கள் கலந்தாலோசனை நடத்தி வரைபடம் குறித்து வாக்கெடுப்பு நடத்த முடிவெடுத்துள்ளனர்.

நேபாளப் பிரதமர் கே.பீ. ஷர்மா ஒலி இந்தியாவுடனான இந்த எல்லைப் பிரச்சினைக்கு ராஜதந்திர முறையில் தீர்வுகாண முயன்றதாக, பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

சர்மாவின் அந்தக் கருத்துக் குறித்து இந்தியா இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை. புதிய வரைபடத்தை நேபாளம், கடந்த மாதம் வெளியிட்டபோது அது தன்னிச்சையான செயல் என இந்தியா குறிப்பிட்டிருந்தது.

அந்த வரைபடத்துக்கு வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை என்று புது டில்லி தெரிவித்தது.

Sat, 06/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை