கேளிக்கை நிகழ்ச்சில் கலந்துகொண்ட பெல்ஜியம் இளவரசருக்கு கொரோனா

பெல்ஜிய இளவரசர் ஜோவகிம்முக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் ஸ்பெயினில் நடந்த ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது வைரஸ் தொற்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவரிடம் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஓரளவே தோன்றியுள்ளன.

28 வயதான இளவரசர் ஜோவகிம் பயில்நிலைப் பயிற்சிக்காக மே 26ஆம் திகதி ஸ்பெயின் சென்றிருந்தார். பின்னர் 28ஆம் திகதி நடந்த ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 27 பேரில் பெல்ஜிய அரசர் பிலிப்பும் அடங்குவார். தற்போது அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் 15 பேருக்கு மேல் ஒன்றுகூட அனுமதியில்லை. அந்த நிகழ்ச்சி தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விதிகளை மீறியிருந்தால், அவர்களுக்கு 11,000 டொலர் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

 

Mon, 06/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை