ஆப்கானில் அமெரிக்க படையை 8,600 ஆக குறைப்பதற்கு திட்டம்

தலிபான்களுடன் கடந்த பெப்ரவரி மாதம் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை அது 8,600ஆகக் குறைத்துக் கொள்ளும் என்று பிராந்தியத்தின் அமெரிக்க கடற்படைத் தளபதி பிரான்க் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்க துருப்புகள் எப்போது எவ்வாறான கட்டத்தில் மேலும் குறைக்கப்படும் என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை. பெப்ரவரியில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி அடுத்த மே மாதத்தில் அமெரிக்கா முழுமையாக வாபஸ் பெறவேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

எனினும் தலிபான்களின் நடத்தையை பொறுத்தே அது அமையும் என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு யுத்தங்களில் பங்கேற்றிருக்கும் அமெரிக்கத் துருப்புகளை நாட்டுக்கு திருப்பி அழைக்கும் கொள்கையைக் கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆப்கானில் இருந்து துருப்புகளை வாபஸ் பெறுவது தொடர்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

ஆப்கான் யுத்தம் கடந்த 2001 ஒக்டோபரில் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

 

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை