அக்கரபத்தனை, டயகம தோட்ட 05ஆம் பிரிவில் இன்று (07) காலை 08 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களில், 07 பெண்களும் ஓர் ஆணும் அடங்குகின்றனர்.
இவர்கள் தேயிலை பறித்துக் கொண்டிருந்த, தேயிலை செடிக்கு அடியில் கட்டப்பட்டிருந்த, குளவிக் கூடொன்று, தேயிலைச் செடி அசைவால் கலைந்து, அதிலிருந்த குளவிகள் இவர்களை கொட்டியுள்ளன.
இவ்வாறு குளவிக் கொட்டினால் பாதிக்கப்பட்டவர்கள், டயகம பிரதேச பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர் செ.தி. பெருமாள்)
Sun, 06/07/2020 - 14:04
from tkn